08/01/2018

சொல்லுங்கண்ணே சொல்லுங்க


வாழ்ந்தவர்கள் வீழ்ந்த கதை
வீழ்ந்தவர்கள் உயர்ந்த கதை
உயர்ந்தவர்கள் சரிந்த கதை
சரிந்தவர்கள் எழுந்த கதை
....................
படிப்பினை பாடம் சொல்லும்
பலரது கதைகள் கண்டும்;
வேண்டுவதை விதைக்காமல்
வெட்டுவதைக் களையாமல்
காலத்தை விரையமாக்கி
காலனிடம் சேருவது
எவ்வகையில் நியாயமென்று
எடுத்துரைப்பீர் நண்பர்களே...

----செ. இராசா----

No comments: