30/07/2019

பகிர்ந்து உண் (குறளின் குரலாய்)


பகிர்ந்து உண்ணும் பண்பிருந்தால்
அகிலமே உந்தன் வசமாகும்!
தனியாய் உண்ணும் குணமிருந்தால்
தனிமையும் உனக்கு விசமாகும்!

விரும்பிய உறவை வரவேற்று
விருந்து அளிப்பதே வாழ்வாகும்!
விருந்து என்கிற பயமின்றி
இருப்பதைப் பகிர்வதே சிறப்பாகும்!

காகத்தைப் போலே பகிர்பவர்க்கு
யாக தர்மங்கள் தேவையில்லை!
வெந்ததைத் தனியாய்த் திண்பவர்க்கு
எந்த பந்தமும் நிலைப்பதில்லை!

✍️செ. இராசா

No comments: