03/07/2019

உண்மையில் யார்தான் சைவர்கள்?


உயிர்க்கொலை புரியா
உணவினைப் புசித்து
உயிரினை வளர்க்கிற மாண்பு- சைவம்
உயர்வாய்ப் போற்றிடும் நோன்பு!

உயிர்க்கொலை இல்லா
உணவுகள் என்பது
உலகில் இங்கே சாத்தியமா- சைவ
உணவுகள் ஆத்திக பாத்தியமா?!

ஆத்திக நாத்திக
கோத்திர சூத்திர
அறிவினை எல்லாம் விடுவோம்- புதிய
அறிவியல் கொஞ்சம் தொடுவோம்!

கோடிகோடி அணுக்களிலே
ஓட்டத்தில் ஒன்றைப் பிழைக்கவைத்து
மற்றதை மாய்க்கும் மனிதர்களே
எப்படி நீங்கள் சைவர்கள்?!

தாவர உயிர்களைக் கொன்றுவிட்டு
தானிய விதைகளைத் தின்றுவிட்டு
தன்னை சைவமாய் நினைப்பவரே..
எங்ஙனம் நீங்கள் சைவர்கள்?!

இட்லி தோசையை ருசிக்க வைக்க
இறக்கிற பாக்டீரியா எத்தனையோ?
தயிரை மோரைப் புளிக்க வைக்க
சாகிற பாக்டீரியா எத்தனையோ?

பூச்சியை உண்கிற தாவரமும்
பூமியில் இங்கே பல உண்டு...
பிள்ளைக் கறியைக் கேட்டதற்கும்
தில்லைக் கதையில் சான்றுண்டு

உண்மையில் யார்தான் சைவர்கள்?
உண்மையை அறிந்தால் சொல்லுங்கள்!!!

✍️செ. இராசா

(புண்படுத்துவதற்காக அல்ல, புரிதலுக்காக மட்டுமே)

No comments: