20/07/2019

ஆதிமூலனே சோதிரூபனே




ஆதிமூலனே சோதிரூபனே
...............ஆவுடை நாயகா!
நீதிதேவனே வேதஞானனே
................நீருடை மன்னவா!

சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போ சிவசிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போ சிவசிவ

ஆத்மநாதராய் எம்முள்நிற்கிற
....................அற்புத நாயகா!
ஆற்றலாகியே எம்மையாள்கிற
....................அர்த்தநா ரீசுவரா!

சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போ சிவசிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போ சிவசிவ

சுத்தபுத்தியில் சித்தனாக்கிடும்
.....................சூட்சமம் சொல்லவா!
செத்தபுத்தியில் வித்தைகாட்டிடும்
.....................சூத்திரம் காட்டவா!

சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போ சிவசிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போ சிவசிவ

No comments: