13/07/2019

மது இல்லாத் தமிழகம்


சிந்தையில் சிறந்தவர்கள்
விந்தையின் வித்தகர்கள்
எங்கும் நிரம்பியுள்ள
எந்தமிழ் நாட்டினிலே
தெள்ளுத்தமிழ்ப் புலவனாம்
வள்ளுவன் சொன்னதுபோல்
கள்ளினைத் தள்ளிவைத்தே
நல்லோராய் வாழ்கின்றார்!!

கள்ளில்லா காரணத்தால்
சொல்லிலே பிழையில்லை!
பிழையில்லா காரணத்தால்
பிரச்சனையும் இங்கில்லை!
சட்ட ஒழுங்கு மீறலில்லை!
கற்புநெறி தவறு இல்லை!
அத்தனையும் இல்லாததால்
கட்சிபேதம் இங்கில்லை!

மது இல்லா மாநிலத்தில்
மதி குறைய வாய்ப்பில்லை..
மதி குறையா காரணத்தால்
மது இங்கே நுழையவில்லை...

இப்படிநான் எண்ணுகையில்
கட்டிலிலே விழுந்துவிட்டேன்..
குடிமகன் நான் விழுந்ததிலே
குடிபற்றி தெளிவுற்றேன்..

ஆம்..

கெட்ட சரக்கடித்தால்
கெட்ட கனவே வருமென்று...

No comments: