15/07/2019

தேயத்தேய மணக்கும் சந்தனம்போல்



தேயத்தேய மணக்கும்
சந்தனம்போல்- நீ(ர்)
பாயப்பாய பூக்கும் நந்தனமே!

காயக்காய வருத்தும்
கதிரவன்போல்- நீ
காயமின்றி எரிக்கும் அதிசயமே!

தோண்டத்தோண்ட ஊறும்
கேணியைப்போல்- நீ
தீண்டத்தீண்ட இனிக்கும் நற்கரும்பே!

படிக்கபடிக்க சுவைக்கும்
கவியினைப்போல்- நீ
கடிக்ககடிக்க இனிக்கும் கல்கண்டே!

அறியஅறிய அறியா
அறியாமைபோல்- நீ
அறிந்தும் அறியாத புது இனமே!

தெளியத்தெளிய அருந்தும்
குடிமகன்போல்- நான்
தெளிந்தும் தெளியாத ஆணினமே!

✍️செ. இராசா

No comments: