29/07/2019

அண்ணாமலை அப்பா!---இன்னா தொலையவைத்தாய்! என்”நான்” புரியவைத்தாய்!!




எல்லாமும் எப்போதும்
எல்லோர்க்கும் கிட்டாது!
எப்படியோ சிலசமயம்
எப்போதோ கிட்டினாலும்
வாய்க்கு கிட்டியது
வயிற்றுக்கு எட்டாது!

அடிமுடி இல்லாதோன்
ஆலயம் போக வேண்டி
அடியேனின் வாழ்க்கையிலும்
அடிமனதில் ஓர் விருப்பம்...
அவ்வாசை முழுமையாய்
அன்றைக்கு நடக்கவில்லை..

காலம் வரும் வரைக்கும்
காய்கள் காய்வதுபோல்
காலன் வரும் வரைக்கும்
காய்வோன் காய்வதுபோல்
காத்திருந்த மூடனுக்கு
காட்டிவிட்டாய் இன்று!

அண்ணாமலை அப்பா!
உண்ணாமுலை அம்மா!
என்னா அழகய்யா..
என்னா அழகு!!

இன்னா தொலையவைத்தாய்!
என்”நான்” புரியவைத்தாய்!!
இனிநான் நானில்லை
இனிநீ வேறில்லை
...

(சீவனே சிவன்)

✍️செ. இராசா

*நீண்டநாள் ஆசையை நிறைவேற்றி

No comments: