12/07/2019

#அம்மா_வச்ச_மீன்_குழம்பு


அம்மா நான் வர்ரேன்னு
அலைபேசி தகவல் வர
தலைகால் புரியாமல்
தாய்மனசு பட்டபாடு
வச்ச மீன் குழம்பில்
வாசமாய் வந்துடுச்சு..

கருத்த புளி கரைச்சு
கண்மாய் மீனு குழம்பு வச்சு
சட்டியில உள்ளதெல்லாம்
தட்டுமேல வைக்கையில
ஆத்தா கண்ணோரம்
ஆறாய்ப் பெருகிடுச்சு..

வறுத்த மீனெடுத்து
வாஞ்சையோடு வைக்கையில
இதையும் சாப்பிடுன்னு
இன்னும்...இன்னும்..போடயில
வருசம் முழுசுக்கும்
வயிறு(ம்) நிரம்பிடுச்சு...

✍️செ. இராசா

No comments: