29/07/2019

நினைத்தாலே முக்திதரும் ............நிமலனைத் தேடி!


நினைத்தாலே முக்திதரும்
............நிமலனைத் தேடி!
வினைநீக்க வந்திங்கு
...........வேண்டுபவர் கோடி!

ஈகைமிகு நாயகனாம்
...........ஈசனைத்தேடி!
வாகைபல சூடிடவே
..........வந்தவர்கள் கோடி!

அண்ணா மலையானின்
...........ஆசியினைத் தேடி!
உண்ணா திருந்திங்கு
...........ஓடிவந்தோர் கோடி!

விண்ணாளும் மண்ணாளும்
.............வித்தகனைத் தேடி!
எந்நாளும் எப்போதும்
...........ஏங்குபவர் கோடி!

✍️ஓம் நமசிவாய

No comments: