31/01/2024

உயிரின் மொழியே உன்னதக் கவியே

உயிரின் மொழியே
உன்னதக் கவியே
நடையில் நதியே
நனைந்த மதியே...(2)

விழியில் விழுந்தத் தருணம் முதலே
விதியின் வழியை திருப்பும் விசையே
நெருங்கி நெருங்கி அருகில் வரவே
நெருப்பின் தகிப்பை எழுப்பும் இசையே!

இருக்கையில் கூட இல்லையெனும்
உணர்வைத் தந்தாய்...
இறைநிலை என்றால் என்னவெனும்
அறிவைத் தந்தாய்..

இரண்டே இல்லை ஒன்றென்றால் அத்வைதம் என்பார்
இதிலென்ன விந்தை ஒன்றென்பார்
நம்மையும் கண்டால்...

இருந்தும் அன்பே வலிக்கிறதே..
பிரிவெனச் சொன்னால்..
வலிதரும் சொல்லும் இருந்திடுமோ
நம்மையும் கண்டால்...

வா..வா...அன்பே...அன்பே...

No comments: