03/01/2024

தட்டுங்க தட்டுங்க

 


தட்டுங்க தட்டுங்க கைகளைத் தட்டுங்க
கொட்டுக்கு தக்கன தட்டுங்களே..
தட்டுங்க தட்டுங்க ஓங்கியேத் தட்டுங்க
திக்கெட்டும் கேட்டிடத் தட்டுங்களே...
 
வந்தவர் யாவரும் சொந்தமே என்றிட
சிந்தையில் ஏற்றிடத் தட்டுங்களே..
முன்னவர் பின்னவர் பேதங்கள் நீங்கிட
வேகமாய்க் கைகளைத் தட்டுங்களே...
 
உள்ளத்தில் எப்போதும் உற்சாகம் பொங்கிட
எல்லோரும் நன்றாகத் தட்டுங்களே..
மன்னாதி மன்னரும் மக்களும் ஒன்றென
எல்லோர்க்கும் கேட்டிடத் தட்டுங்களே..
 
✍️செ. இராசா 
 
(முன்போர்முறை கடல் சார்ந்த பாடல் செய்தபோது கடலூரில் இருந்துவந்து கத்தாரில் மீன்பிடிப்புத் தொழிலில் கோலோச்சிக் கொண்டிருக்கும் நம் மீனவ நண்பர் வீரகுமார் அவர்களையும் அவர் மகனையும் சந்தித்திருந்தேன். இன்று அவர்களை மீண்டும் சந்தித்தபோது எடுத்த ஒளிப்படம்)
 

No comments: