17/01/2024

அடடாயிவள் அவடா

 அடடாயிவள் அவடாயென
.....அலைபாய்ந்திட நெஞ்சம்
விடுடாயென விதிடாயென
.......விரைவாகவே அஞ்சும்!

இடராயிலை இனிதாவென
......இழையோடிட நெஞ்சம்
இடியேனென இவளேனென
......இயல்பாகவே அஞ்சும்!

சுடராயிலை இருளாவென
.....சுமையேறிடும் நெஞ்சம்
சுயவேதனை இதுரோதனைத்
......துயரேயென அஞ்சும்!

கடலாயிலை கடுகாவென
......கவிபாடிடும் நெஞ்சம்
கரைசேர்ந்திடும் வழிதேடிட
..... கனிவாகவே கெஞ்சும்!

✍️செ. இராசா

No comments: