31/01/2024

அங்குமிங்கும் ஓடிய பிள்ளையை

 


அங்குமிங்கும் ஓடிய பிள்ளையை
அடக்கி அமர வைத்தார்கள்!

தனியே அறை கொடுத்து
ஒதுக்கி வைத்தார்கள்!

இதைச் செய்யாதே
அதைச் செய்யாதேயென
கட்டளை விதித்தார்கள்!

ஆனால் அவள் அதையெல்லாம்
கண்டுகொள்ளவே இல்லை...
காரணம்...
அவளுக்கும்
அத்தனிமை பிடித்திருந்தது...

அவள் அண்ணன்
அவளைத் தொந்தரவு செய்யவில்லை
அவள் அம்மா
அவளைக் கண்டு(டி)க்கவே இல்லை
ஆம்...
அவள் கைப்பேசியோடு
விளையாடிக் கொண்டே இருந்தாள்

பாவம்....
இவர்கள்தான் சொல்கிறார்கள்
அவள் பெரிய மனுஷி ஆனாளென்று..

✍️செ. இராசா

No comments: