17/01/2024

துரியாதீதம்

ஆக்கினையில் தன்னுயிரை
......ஆழ்ந்துணரும் ஞானத்தை
ஆய்ந்தறியத் தேவை இல்லையோ?!
 
தூக்கிசிர உச்சியினில்
.....சுத்தமனம் ஒன்றுவதை
தோய்ந்துணர ஆசை இல்லையோ?!
 
நீர்க்குமிழி போலெழும்பி
....நிற்காமல் அண்டமதை
நீபார்க்க எண்ண வில்லையோ?
 
யார்க்குமுயிர் வந்தவழி
....ஆதிவெளி சுத்தவெளி
ஈர்க்குமதைத் தேட வில்லையோ?!
 
✍️செ. இராசா

No comments: