30/06/2023

நடந்தது அத்தனையும்

                                                                                                                                        

நடந்தது அத்தனையும்
நன்றாகவே நடந்தது
நடப்பது அத்தனையும்
நன்றாகவே நடக்குது

நடக்க இருப்பதுவும்
நன்றாகவே நடக்கும் (2)

எதை இழந்திட்டாய்நீ
எதற்கு நீ அழுகுறாய்?
எதைப் படைத்திட்டாய்நீ
வீணா ஏன் புலம்புறாய்?

எதை எதை எடுத்தாயோ
இங்கிருந்துதான் எடுத்தாய்
எதை எதை கொடுத்தாயோ
இங்கிருந்துதான் கொடுத்தாய்

இன்னைக்கி உன்னது
நாளைக்கு அவனது
நாளைக்கி வருவது
மறுநாள் பிறரது...

உலக நியதி யாது?- அதை
உற்றுநோக்கிப் பாரு...
படைப்பின் விதியைப் பார்த்து- உன்
பயண வழியை மாத்து....

✍️செ. இராசா

No comments: