19/06/2023

 


கீழகீழ கீழயென்று
.......கீழசென்று பார்க்கையில்
ஆழமான சேதிசொல்லும்
.......அர்த்தமுன்னுள் தோன்றுமே!
மேலமேல மேலயென்று
.......மேலயேறிப் போகையில்
ஞாலமுந்தன் காலிலென்ற
.........மாயைவந்து போகுமே!

வேலைவேலை வேலையென்று
........வேலைதேடும் நாட்களில்
காலைமாலை பேதமின்றி
.........மூளைவேலைக் கேங்குமே!
நாளைநாளை நாளையென்று
‌..........நாளையோட்டும் மாந்தரை
நாளையென்ன நாளையென்று
..........நாமுமோட்ட வேண்டுமே!

✍️செ‌. இராசா

No comments: