20/06/2023

மல்லிகைப்பூவாய் இல்லாமல் பாறாங்கல்லாய் இருந்தால்

 


நயமான அரிசியையும்
உரிச்ச உளுந்தையும்
மூனுக்கு முக்கால்னு
முறையா அளந்து
நாலுக்கு அஞ்சுமுறை
அலசியதை ஊறவச்சு
நறுநறுன்னு இல்லாம
நைசா அரைச்சு
தனித்தனியா அரைச்சதில
உப்பவிட்டுக் கலக்கி
புளிப்பேறும் வரைக்கும்
பொறுமையாக் காத்திருந்து
பொங்கிவரும் மாவை
பூப்போல அள்ளி
குழிக்கொரு கரண்டியா
கொஞ்சமா ஊத்தி
ஆவியில வெந்ததும்
அப்படியே இறக்குனா..
அட...அட....அடா‌‌..
....
என்னத்த சொல்ல?!
....
மல்லிகைப்பூவாய் இல்லாமல்
பாறாங்கல்லாய் இருந்தால்
நிர்வாகம் பொறுப்பல்ல
😃😃😃

✍️செ‌‌. இராசா

No comments: