21/06/2023

யோகா குறள்கள்




யோகா வழிச்சென்றால் என்றைக்கும் சோர்வில்லை
வாகாய் உடல்மாறும் வா
(1)

பந்துபோல் துள்ளிப் பறந்திட வேண்டுமெனில்
விந்துவளம் கூட்ட விரும்பு
(2)

காயகல்பம் என்னும் கலைபயிலும் மாந்தர்க்கு
நோயற்ற வாழ்வாயுள் நூறு
(3)

உடல்நலமும் நல்ல உளவளமும் கூட்டித்
தடம்பதித்து நிற்பாய்த் தனித்து
(4)

எண்ணம்சொல் செய்கையில் ஏற்றங்கள் பெற்றுவிட்டால்
வண்ணமய மாகும்நம் வாழ்வு
(5)

எல்லாக் கலையும் கலையல்ல தீதேதும்
இல்லாக் கலையே கலை
(6)

இணக்கமாய் வாழும் இயல்புள்ளம் கொண்டால்
வணங்குவர் எல்லோரும் வந்து
(7)

தலைகுனிந்து கற்கும் தவக்கலை என்றும்
தலைநிமிர வைக்கும் தனித்து
(8.)

பேசுவதைப் பேசார்முன் பேசாமல் மௌனித்து
பேசுகின்ற நேரத்தில் பேசு
(9)

ஆத்ம பலம்கூட்டும் அக்கல்வி கல்லாமல்
சாத்திரம் கற்றென்ன சால்பு
(10)

✍️செ. இராசா

No comments: