12/06/2023

நீதிநேர்மை நியாயமென்று வாழுகின்ற மாந்தரை

 


நீதிநேர்மை நியாயமென்று
.......வாழுகின்ற மாந்தரை
போதிதர்மர் பேரனென்று
......போகவிட்டுப் பேசுறார்!
சாதிபேதம் எதுவுமின்றி
......கைகொடுக்கும் பேர்களை
சாதிமதம் ஆய்ந்தறிந்து
......தன்பலத்தைக் காட்டுறார்‌!
 
உள்ளகாசில் நன்றுசெய்யும்
......உண்மையான மாந்தரை
உள்ளதாலே தருவதாக
......ஊதிவூதித் தூத்துறார்!
கள்ளமான பாதையேறக்
......கால்பிடிக்கும் பேர்களை
வெள்ளையுள்ளம் கொண்டவர்போல்
.....மென்மையாகப் பார்க்குறார்!
 
✍️செ. இராசா

No comments: