09/06/2023

என்ன தவறிழைத்தேன் சகியே

என்ன தவறிழைத்தேன் சகியே
ஏனிந்தத் தண்டனையோ...?!
என்னை மறந்தனையோ சகியே
யாதுமென் விதிதானோ?!

கூறடி நேரடியாய் சகியே
கொன்றிடல் முறைதானோ?!
நூறடி நூறடியாய் சகியே
நுன்மனம் விலகியதோ?!

யாரடி தீர்த்திடுவார் சகியே
என்நிலை இதுதானோ?
பாரடி பார்வையினால் சகியே
பைத்தியம் தெளியாதோ?!

பைந்தமிழ் பார்க்குதடி சகியே
பாடிய கூற்றினையே....
செந்தமிழ் சொல்லுமடி சகியே
தேடிய நாட்களையே...

ஓடியே வந்திடடி சகியே
ஒதுங்கிடல் சரியில்லையே
கூடிட எண்ணிடடி சகியே
கோபமும் முறையில்லையே

வாழ்வதும் ஒருமுறையே சகியே
வாயினி வாழ்ந்திடவே...
ஆழ்மனம் துடிக்குதடி சகியே
அன்பினை வார்த்திடவே..

✍️செ. இராசா

No comments: