04/06/2023

 


 

எத்தனை எத்தனை தொழில்நுட்பம்
இருந்தும் இங்கே என்னபயன்?
இத்தனை உயிர்கள் போனபின்னும்
யார்தான் பொறுப்பை ஏற்கிறவன்?!

புல்லட் வேகத் தொடரியெல்லாம்
போகிற காலம் வந்ததென்றீர்!
பொல்லாப் பொய்கள் சொல்லாதீர்
போகிற தடத்தை சரிசெய்வீர்!!

இனியும் இனியும் இதுபோலே
இன்னொரு விபத்து வேண்டாமே
கனிவுடன் கடமை புரிந்தாலே
கண்களில் கவனம் சிதறாதே....

✍️செ. இராசா

No comments: