08/06/2022

பாடலின் வரிகள்பற்றி என் மலையாள நண்பர்

 


இதுவரையிலும் #கவிராகம் வெளியீடாக எத்தனையோ பாடல்கள் வெளிவந்திருந்தாலும், இந்தக் #கடல் பற்றிய பாடல் என்னவோ அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்ததாகப் பலரும் சொன்னார்கள். அதற்குக் காரணம் எழுத்தா? இசையா? காட்சிப்பதிவா? என்றெல்லாம் பிரித்திப்பார்க்காமல் இது ஒட்டுமொத்தக் குழுவினரின் ஒருமித்த கூட்டு முயற்சியின் வெற்றி என்றே சொல்லலாம். வெறும் 1.3 K பார்வையாளர்கள் வாங்குவதெல்லாம் ஒரு வெற்றியா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழாமல் இல்லை. உண்மைதான்....எங்களின் உயரம் வெறும் 1.2 K அல்ல. இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது....ஆயினும், இப்பாடலில்தான் நான் முதன் முதலாக கவிஞர் என்று போட்டுக்கொள்ள மனமுவந்தேன்.
அது எப்படி...நமக்கு நாமே போடலாம்?! அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. (அதுபற்றிப் பின்னர் சொல்கிறேன்)
 
இந்தப் பாடலின் வரிகள்பற்றி என் மலையாள நண்பர் ஒருவர், வரிவரியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு மிகவும் ஆச்சரியப்பட்டார். அதில் குறிப்பிட்ட சில வரிகள் பற்றி இப்படிக் கூறினேன்;
 
*மழை நீரின்றி உலகில்லை என்ற வள்ளுவரின் வான் சிறப்பைக் கூறி, அம்மழை உருவாகக் காரணமே கடல் என்றுணர்த்தும் வரியை விளக்கினேன்.
 
* இத்தனை கோடி வருடங்கள் ஆனபின்னும் கடல் நீரின் எல்லைகள் மாறினாலும் அதன் அளவு இன்னும் மாறவில்லை என்பது மட்டுமல்ல, அது தன் எல்லையை மீறி சுனாமியாக வந்தாலும், சுனாமிக்குக் காரணம் (ஊறுமூலம்) கடலில்லை என்றும், நிலத்தில் ஏற்படும் அழுத்தவிசையே காரணம் என்றும் உள்ளர்த்தத்தைச் சுட்டிக்காட்டினேன்.
 
*கடலும் கடல் சார்ந்த தொழிலும் இல்லையென்றால் சாப்பிட்டிற்கே வழி இல்லாமல் போகும் சூழலை விளக்கும் வரிகளைக் கூறினேன்.
 
அதில் ஈரம் கொண்ட என்றஇருபொருள் தரும் சிலேடை அணியை எப்படியோ விளக்கினேன்.
 
*இறுதியாக மீனவர்கள் எப்படி கறையைத் துறந்து, அலையைக் கடந்து, ஆழம் பார்த்து, கணித்து, வலைபோட்டு மீன்பிடிக்கின்றார்கள் என்னும் ஒட்டுமொத்த நடைமுறையையும் விளக்கியபோது, எப்படி இவை பற்றித் தெரியும் என்றார்? ஒரு புன்னகையை விடையாய்த் தந்தேன்.
 
அந்த மலையாளி பொறியியாளர் நண்பரை எமக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். இவரைப்போல் பல மாற்றுமொழி நண்பர்களும் நம் எழுத்தை மொழிமாற்றம் செய்தும் படிக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்போது மிகுந்த மனமகிழ்ச்சி வருகிறதுதான் . அதிலும் இப்படி நாம் எழுதியதை நாமே விளக்கும் விடயம் இருக்கிறதே...அது மாற்றுமொழியாளர்கள் என்றால் சரி..ஆனால் நம்மவர்களுக்கே விளக்க வேண்டுமென்றால்தான் யோசிக்க வைக்கிறது. காரணம், நம் மொழியின் கூற்றை நம்மவர்க்கும் விளக்க வேண்டியுள்ளதே என்னும் ஆதங்கம்தான். 
இதுவரையிலும் #கவிராகம் வெளியீடாக எத்தனையோ பாடல்கள் வெளிவந்திருந்தாலும், இந்தக் #கடல் பற்றிய பாடல் என்னவோ அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்ததாகப் பலரும் சொன்னார்கள். அதற்குக் காரணம் எழுத்தா? இசையா? காட்சிப்பதிவா? என்றெல்லாம் பிரித்திப்பார்க்காமல் இது ஒட்டுமொத்தக் குழுவினரின் ஒருமித்த கூட்டு முயற்சியின் வெற்றி என்றே சொல்லலாம். வெறும் 1.2 K பார்வையாளர்கள் வாங்குவதெல்லாம் ஒரு வெற்றியா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழாமல் இல்லை. உண்மைதான்....எங்களின் உயரம் வெறும் 1.2 K அல்ல. இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது....ஆயினும், இப்பாடலில்தான் நான் முதன் முதலாக கவிஞர் என்று போட்டுக்கொள்ள மனமுவந்தேன்.
அது எப்படி...நமக்கு நாமே போடலாம்?! அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. (அதுபற்றிப் பின்னர் சொல்கிறேன்)
இந்தப் பாடலின் வரிகள்பற்றி என் மலையாள நண்பர் ஒருவர், வரிவரியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு மிகவும் ஆச்சரியப்பட்டார். அதில் குறிப்பிட்ட சில வரிகள் பற்றி இப்படிக் கூறினேன்;
*மழை நீரின்றி உலகில்லை என்ற வள்ளுவரின் வான் சிறப்பைக் கூறி, அம்மழை உருவாகக் காரணமே கடல் என்றுணர்த்தும் வரியை விளக்கினேன்.
* இத்தனை கோடி வருடங்கள் ஆனபின்னும் கடல் நீரின் எல்லைகள் மாறினாலும் அதன் அளவு இன்னும் மாறவில்லை என்பது மட்டுமல்ல, அது தன் எல்லையை மீறி சுனாமியாக வந்தாலும், சுனாமிக்குக் காரணம் (ஊறுமூலம்) கடலில்லை என்றும், நிலத்தில் ஏற்படும் அழுத்தவிசையே காரணம் என்றும் உள்ளர்த்தத்தைச் சுட்டிக்காட்டினேன்.
*கடலும் கடல் சார்ந்த தொழிலும் இல்லையென்றால் சாப்பிட்டிற்கே வழி இல்லாமல் போகும் சூழலை விளக்கும் வரிகளைக் கூறினேன்.
 
அதில் ஈரம் கொண்ட என்றஇருபொருள் தரும் சிலேடை அணியை எப்படியோ விளக்கினேன்.
 
*இறுதியாக மீனவர்கள் எப்படி கறையைத் துறந்து, அலையைக் கடந்து, ஆழம் பார்த்து, கணித்து, வலைபோட்டு மீன்பிடிக்கின்றார்கள் என்னும் ஒட்டுமொத்த நடைமுறையையும் விளக்கியபோது, எப்படி இவை பற்றித் தெரியும் என்றார்? ஒரு புன்னகையை விடையாய்த் தந்தேன்.
 
அந்த மலையாளி பொறியியாளர் நண்பரை எமக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். இவரைப்போல் பல மாற்றுமொழி நண்பர்களும் நம் எழுத்தை மொழிமாற்றம் செய்தும் படிக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்போது மிகுந்த மனமகிழ்ச்சி வருகிறதுதான் . அதிலும் இப்படி நாம் எழுதியதை நாமே விளக்கும் விடயம் இருக்கிறதே...அது மாற்றுமொழியாளர்கள் என்றால் சரி..ஆனால் நம்மவர்களுக்கே விளக்க வேண்டுமென்றால்தான் யோசிக்க வைக்கிறது. காரணம், நம் மொழியின் கூற்றை நம்மவர்க்கும் விளக்க வேண்டியுள்ளதே என்னும் ஆதங்கம்தான்.

No comments: