21/06/2022

நான் வியந்த மனிதர்- 2

 

இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுத்த அன்பு நண்பர் திரு. சதாசிவம் அவர்களை சந்தித்தது எம் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. உண்மைதாங்க... எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்காகவே வாழும் மனிதர்களில் முத்தானவர் இவர். இப்பதிவில் என்னால் இவர் செய்த நன்மையை வெளிப்படையாக பதிவிட முடியாவிட்டாலும் பிற்காலத்தில் ஆவணமாக்குவேன் என்பதை இங்கே உறுதியளிக்கிறேன்.
 
நேற்று இரவு 1:30 மணிக்கு விழுப்புரம் வந்த என்னை வரவேற்று, தன் வீட்டில் தங்க வைத்து, காலையில் மிகச்சிறந்த உபசரிப்பில் உணவு வழங்கி, பேருந்து நிலையம்வரை வந்து வழியனுப்பி வைத்தார். இப்படியெல்லாம், எல்லோர் மேலும் அன்பைப் பொழியும் நட்பு கிடைப்பதெல்லாம் அவரவர் செய்த தவமல்லாது வேறென்ன?!
 
இனிய மனமார்ந்த நன்றி ஐயா
🙏
(பிற்காலத்தில் ஒரு வெற்றி விழாவிற்குப்பின் வரும் பதிவில் கூடுதல் விபரங்களை வழங்குவேன்.)
✍️செ. இராசா

No comments: