07/06/2022

செந்தமிழ்த் தேன்மொழியால்

 

செந்தமிழ்த் தேன்மொழியால்
திடீரென உதிக்கும் கற்பனையால்(2)..
பௌர்ணமி இரவில் பைத்திய நிலையில்
படிக்கிற பாடலுங்கோ...
 
என்னப்பா....பாடலுங்குற படிக்கிறேங்குற
அப்ப...பாடமாட்டியா?!
 
பாடறியேன் படிப்பறியேன் பாட்டுக் கிளாசு
நானறியேன்
மூடறிவேன் முறையறிவேன் முழுசா கானா நான் தருவேன்
அதுசரி... ஆனால் பழசா கீதேப்பா...
இது ரீமிக்சு மாமு
 
ராஜா கைய வச்சா...அது மாசா ஆகும் மச்சி
நான் புல்லா ஏத்திக்கின்னா...
ஷோக்கா செய்வேன் பாரு மச்சி...
ராப்பு என்றாலும் பாப்பு என்றாலும்
சூப்பர் டூப்பர் மச்சி...
தர ரம்பம் பம்பம்
இந்த ராஜா கைய வச்சா...அது மாசா ஆகும் மச்சி
நான் புல்லா ஏத்திக்கின்னா...
ஷோக்கா செய்வேன் பாரு மச்சி...
 
ம்ம்...ஷோக்காதான் மச்சி கீது...எனக்கொரு ஆசை மச்சி....
 
ஆசை நூறுவகை வாழ்வில் நூறுசுவை வா
வாழும் காலம் வரை வாட்டும் சோகம் துற வா
மனம் மாறப் பாடலாம் கணம் நாமும் வாழலாம்
அட வா வா....வந்தாடடா
அட வா டா....வந்தாடடா...
ஆசை நூறுவகை வாழ்வில் நூறுசுவை வா
 
அவன சொல்ல விடுமச்சி
என்னதான் ஆசைன்னு கேப்போம்....நீ சொல்லு மாமு....
 
சின்னச் சின்ன ஆசை...டடடான்
... சிறுவயது ஆசை...டடான்
பட்டர்பிளையா மாறி டடான்
....பறந்துவர ஆசை டடான்...
தாயிலாந்து மண்ணை..டடான்
....தொட்டுவர ஆசை..டடான்
என்னை முற்றும் துறந்து..டடான்
....சாமியாக ஆசை..டடான்
 
மச்சி ‌‌....இதுவாடா சின்ன ஆசை...இது காஸ்ட்லியான ஆசை மச்சி.. 

நான் என்ன தனியாவா தீவு கேட்டேன்
 
தனியே தன்னந்தனியே நான் கன்னித் தீவா கேட்டேன்
கனவே என் கனவே அதில் மையம் ஆகி விட்டேன்...
தெரியாதா அதுதான்டா
தெரியாதா
தனியே...தனியே...
 
மச்சி இவன் வேற மாறி மச்சி....
 
ஆமான்டா ஆமாம்...இவன் வேற மாறி
தாங்காது சாமி...இங்க டப்பு லேது
ஆனாலும் ராசா இது ரொம்ப ஓவர்
ஆகாது சாமி.... என்றும் நெவர் நெவர்
நெகட்டிவா பேசாதடா....ஓ...
 
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...
ஏன் கையை..
ஏன் கையை...
அடச்சே...
 
புதுசு புதுசா டவுசர் போட்டு
பட பட படன்னு வருவாங்க..
தினுசு தினாசா ஸ்டெப்பு போட்டு
பர்சுல கைய வப்பாங்க...
உள்ள இருக்கும் அம்புட்டயும்
...உருவிவிட்டுப் போவாங்க
ஸ்வீட்டி நாட்டி பேர மாத்தி
அலையா அலையும் ஃபாரின் பார்ட்டி
நீ போவியா மாமா
....நீ நீ போவியா...
 
ஆகா....நீ சொல்றது சரிதான் மச்சி
 
குத்துவிளக்கு குத்துவிளக்கு
ஏத்த ஒரு பொண்ணிருக்கா குத்துவிளக்கு
மத்ததெதுக்கு மத்ததெதுக்கு
மத்ததேதும் தேவையில்லை அத்த ஒதுக்கு
செம்ம செம்ம மச்சி...
 
✍️செ. இராசா

No comments: