08/06/2022

நான் வியந்த மனிதர்கள் 1------------ மாமனிதர் ஹமாம் சார்

 



பொதுவாகவே உயர் பதவியில் இருப்பவர்கள், கீழே இறங்கிவந்து வேலைபார்ப்பதென்பது மிகவும் அரிதாகிவிட்ட இக்காலத்தில், கத்தாரின் மிக உயர்ந்த பல நிறுவனங்களின் முதலாளியாய் இருக்கும் ஒருவர், காலையில் முதல் ஆளாக வேலை பார்க்கும் இடங்களிற்குவந்து சுட்டெரிக்கும் பாலைவன வெயிலில் குழிவெட்டும் இயந்திரத்தின் அருகில் நின்றுகொண்டு வியர்வை சொட்டச்சொட்ட வேலை பார்ப்பதென்பதெல்லாம் யாரும் கேள்விப்படாதவொன்றே. அதுமட்டுமல்ல இன்று உலகமே கத்தாரை வியந்து பார்க்கக் காரணமாக இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து 2022 போட்டிக்கு வித்திட்ட முக்கியமான குழுவில் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும் இவரே. பொதுவாக, கத்தார் மின்சாரத்துறையில் உள்ளவர்கள் அனைவருக்குமே இவரைத் தெரியாமல் இருக்காது. எப்பேற்பட்ட வேலையாய் இருந்தாலும் படுவேகத்தில் முடிப்பது இவரின் தனிச்சிறப்பு. 
 
அதுமட்டுமல்ல, தன்னோடுள்ள அனைவருக்கும் இவரேதான் தான் கொண்டுவந்த தேநீரைத் தன் கையால் வழங்குவார். இவரைப்பற்றி எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், இவரிடம் முன்னர் ஒருமுறை தேநீர் அருந்தியிருந்தாலும், இன்றைய தினம் இவரிடம் பேசுகையில் இவரின் எளிமையும், ஆத்மார்த்தமான அன்போடு பழகும் விதமும், தொழில்நுட்பம் சார்ந்த அறிவும் என்னை மேலும் மேலும் வியக்க வைத்தது. இவரைக் கண்டாலே நடுங்குவோர்கள் மத்தியில் எம்மோடு சகஜமாகப் பழகியது என்னால் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. இவர் நிறுவனத்தில் வேலை பார்த்த எத்தனையோ நபர்களுக்கு எவ்வளவோ செய்துள்ளார். பெரிய பெரிய வண்டிகளையும் (Fortuner type cars) பெரிய அளவிலான பணத்தையும் அள்ளிக்கொடுத்துள்ளார். அவ்வளவு பணம், பதவி, புகழ் என அத்தனை இருந்தும் இன்னும் வியர்க்க விறுவிறுக்க உழைக்கிறார்..... அப்பேர்ப்பட்ட மனிதரோடு தேநீர் அருந்தி நிறைய விடயங்கள் பேசியதென்பது, பெரிய விடயம்தானே உறவுகளே...?!!
நன்றி நன்றி ஐயா🙏🙏
🙏

No comments: