22/06/2022

ந.ம. ஜெகன் அண்ணா- சந்தித்த தருணம் பற்றி குறள் வெண்பாவில்

 


இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான திரு ந.ம. ஜெகன் அண்ணா அவர்களைத் திருப்பூரில் சந்தித்த மகிழ்வான தருணம். அவரைப்பற்றி இங்கே குறள் வெண்பாவில் வழங்குகிறேன்.
 
#முள்ளில்_பனித்துளியில் முன்னோட்டம் காட்டிவிட்டு
சொல்லி அடிக்கின்றார் சூழ்ந்து!
(1)
 
இரண்டாம் படைப்பாய் இவரின்று செய்யும்
#வரதா வரும்போது பார்!!!
(2)
 
உயரத்தில் நின்றும் உருவத்தில் தாழும்
வியப்பூட்டும் வாமனரின் மீள்!
(3)
 
தன்னோடு சேர்ந்தே சகலரையும் ஏற்றிவிடும்
மின்தூக்கி போல்தான் இவர்!
(4)
 
முதல்படம் மூலம் முறையாகக் கற்றே
அதன்மூலம் போறார் அடுத்து!
(5)
 
செய்த பிழைகளைந்து செம்மையுடன் செய்வதினால்
எய்திடுவார் வெற்றி இலக்கு!
(6)
 
சொன்னசொல் காப்பாற்றும் சொற்பநபர் கூட்டத்தில்
அண்ணனுக்கே முன்வரிசை அங்கு!
(7)
 
வாய்ப்பிற்காய் ஏங்குவோர் வாசல் வருமுன்னே
வாய்ப்புதரும் நற்குண மாண்பு!
(8)
 
கலையின்மேல் கொண்டுள்ள காதலால் தானே
நிலையுயர்ந்து நிற்கின்றார் இன்று.
(9)
 
நல்லவராய் வாழும் நமஜெகன் அண்ணாநல்
வல்லவராய் வெல்லயெம் வாழ்த்து!
(10)
 
✍️செ. இராசா

 

No comments: