29/06/2022

உங்கக் கழுத்தில் தொங்குதே.

 


இதுதான் இங்கேயே உங்கக் கழுத்தில் தொங்குதே... அப்புறம் ஏன்... அவ்வளவு கஷ்டப்பட்டுபோய் பார்த்தோம்.
----என் மகள் என் கழுத்தில் கிடந்த சிவலிங்கத்தைப் பார்த்து இராமேஸ்வரம் ஏன் போய் வந்தோம் என்பதற்காக கேட்ட கேள்வி.
ஆகா.... சிந்திக்க வைக்கும் கேள்வியே இங்கு கண்ணிகளாக.... சிவவாக்கியர் சந்தத்தில்..
 
எங்கிலோ உறையுமொன்றைத் தேடிப்
போகுமுன்னராய்
உன்னிலே உறையுமொன்றை நீயுங் காணவில்லையோ?
 
என்னிலே உறையுமொன்றை நானுங் கண்டுகொண்டதால்
எங்கிலும் உறையுமுண்மை ஒன்றாய் ஒன்றிநிற்கிறேன்!
✍️செ. இராசா

No comments: