08/12/2021

நீயே உனக்கு ஒளியாவாய்....

 


 #நீயே_உனக்கு_ஒளியாவாய்....
நீயே உனக்கு ஒளியாவாய்....

புத்தம் சரணம் சங்கம் சரணம் தர்மம் சரணம் சரணமே...(2)

உந்தனுள்ளே உந்தனுள்ளே
..........ஒன்றியொன்றித் தேடுவாய்!
சிந்தையுள்ளே சென்றுவுள்ளே
..........சீவனொன்றித் தேறுவாய்!
அந்தமாதி சொந்தசோதி
..........அர்த்தமாகி மின்னுவாய்!
விந்தையாகி உந்தனாவி
..........மீண்டதெங்கே எண்ணுவாய்!?

பெண்ணிலோடி போதையேறி
.........பேதைபோல பாவியாய்
மண்ணிலோடி மாயையேறி
.........வாழ்ந்திடாதே கோழையாய்!
கண்ணைமூடி தன்னிலோடி
.........கண்ணிலுன்னைக் காணுவாய்!
அண்டமோடி அங்குமோதி
.........ஐயமின்றி ஓருவாய்!

துன்பமெங்கே இன்பமெங்கே
.....தோண்டியுன்னைத் தேடுவாய்
இன்னலென்று கண்டபின்னே
.... எண்ணியுன்னைத் தேற்றுவாய்
மன்னனென்ன மக்களென்ன
....மாண்டபின்னே சொல்லுவாய்?
வந்தபின்னே நொந்தபின்னே
...மண்ணையள்ளித் தள்ளுவாய்!

✍️செ. இராசா

No comments: