29/12/2021

கரையின் காதல் ----------கடலோரக் கவிதை



உன் விரல்கள் மீட்டுகின்ற வாத்தியம் நான்!
உன் சுவாசம் மோதுகின்ற நாசியும் நான்!
உன் நகவரிகள் வாசிக்கும் வாசகன் நான்!
உன் கழிவுகளை ஏற்கின்ற யாசகனும் நான்!
உன் இரசிகர்கள் அமர்கின்ற இருக்கை நான்!
உனைத் தழுவ விரிந்துள்ள இரு-கை நான்!
உன்னிலே ஏற்றிவிடும் ஏணிப்படி நான்!
உன்னிடம் கேட்டதில்லை ஏனிப்படி நான்?

✍️செ. இராசா

No comments: