10/12/2021

 


இத்தனை வருடங்கள் கத்தாரில் இருந்தாலும் தலைநகர் தோகாவில் இருந்து திருச்சிக்கு நேரடியாகச் செல்லும் முதல் விமானப்பயணம் இதுவே...திருச்சி வருபவர்கள் அனைவருக்குமே உள்ள கனவு இது. பெரும்பாலும் SRI LANKAN AIRLINESல் தான் கொழும்பு வழியாக வருவோம். இரவில் கிளம்பி மாறிமாறி வருவதால் பயண அலுப்பு கண்டிப்பாக இருக்கும். மேலும் நம் பணம் நம் நாட்டிற்குச் செல்லவில்லையே என்ற ஆதங்கமும் அதிகமாகவே இருக்கும். அதையெல்லாம் போக்கும் விதமாக இரண்டு விமானங்கள் (டெக்கான் மற்றும் ஏர் இந்தியா) இரண்டு நாட்கள் மட்டும் விடப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியான செய்தியே. ஆயினும் இச்சேவை தொடர்ந்து அனைத்து நாட்களிலும் நடக்க வேண்டுமென்றால் நாம் கொண்டு செல்லும் பொருட்களின் எடை அளவிலும் மற்ற இதர வசதிகளிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். டாட்டாவிடம் இந்திய இயர்லைன்ஸ் கைமாறியுள்ளதால் கண்டிப்பாக கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்றே நம்புகிறேன்.
 
எது எப்படியோ...?! இப்பயணம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்லும் பயணம் மட்டுமல்ல அதிகமான முன்னேற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் பல வருடங்களுக்குப்பிறகு சாமி ஐயப்பனை தரிசக்கப் போகும் பயணமும்கூட.
எல்லாம் வல்ல இறைவனை அருள்புரிய வேண்டுகிறேன்... 🙏🙏
🙏
ஓம். சாமியே சரணம் ஐயப்பா
🙏
✍️செ. இராசா

No comments: