27/12/2021

தன்குற்றம் நீக்கியபின் ---------- வள்ளுவர் திங்கள் 191


 

நாற்றமாய் உள்ளதென நாக்கூசத் திட்டுகையில்
நாற்றமாய் ஆவதெது?; நாக்கு
(1)

மதுக்குளத்தில் நீந்தி மதிக்கரையில் ஏறான்
மதுவிலக்குப் பேசல் மடம்
(2)

இதையதைச் செய்யென எப்போதும் பேசி
எதையுமே செய்யாதோர் இங்கு
(3)

தூரத்தில் உள்ளதைத் துப்புறவு செய்தபின்
ஓரத்தில் வைக்கா(து) ஒழுகு
(4)

ஊரைக் குறைசொல்லி ஒப்பாரி வைப்போர்கள்
யாரைச் சரியென்பார் இங்கு
(5)

ஊழலோ ஊழலென ஓங்கி உரைப்பவரே
ஆழமாய் வைக்கின்றார் ஆப்பு
(6)

தன்குற்றம் நீங்காமல் சாற்றுகின்ற குற்றங்கள்
மன்றத்தில் போகும் மறைந்து
(7)

குறையில்லாச் சொந்தங்கள் கூடிட வேண்டின்
நிறையுள்ளம் வேண்டும் நினை
(8.)

பிறர்குறையைப் பேசுகிற பேச்சுக்கள் எல்லாம்
அறச்செயல் இல்லை அறி
(9)

தன்னை அறிவோரே தன்குற்றம் காண்கின்றார்
உண்மையை உள்ளாய்ந்(து) உணர்
(10)

✍️செ. இராசா


No comments: