12/12/2021

 


 

 

 

நீண்ட இடைவெளியில்
எல்லாமும் மாறிவிட்டது
நரைதட்டிய நிஜங்கள்
நிழல்களைப் பார்த்தே நகர்கிறது...
தன்முனைப்புச் சிறைகள்
தன்னை விடுவிக்க ஏங்குகிறது...
இருந்தும்...
இருந்தும்...
ஏதோ ஒன்று தடுக்கிறது..
இன்னும் முழுமையாக மாறமுடியாமல்...

✍️செ. இராசா

No comments: