06/12/2021

ஆத்தீ----------வள்ளுவர் திங்கள் 188

 #ஆத்தீ
#வள்ளுவர்_திங்கள்_188

காமத்தீக் குச்சியைக் கண்களினால் பற்றவைக்க
ஓமத்தீ வார்க்கும் உடல்
(1)

ஆத்தீ அடியாத்தீ... ஆசைத்தீ பொல்லாத்தீ
வார்த்தால் வருமய்யா வம்பு
(2)

நினைத்தவுடன் பற்றுகின்ற நெஞ்சத்துத் தீயை
அணைக்கின்ற நீர்தானே அன்பு
(3)

பிரிவே சுடுமென்று பேசிய சீதை
பிரிந்தே சுடுபட்டால் பின்பு
(4)

சேர்ந்தோர் பிரிகையில் தீயாய்ச் சுடுவதால்
நேர்வது நெஞ்சில் வடு
(5)

அயலகம் சென்றோர் அகத்தின் வலியை
அயலார் அறிவ(து) அரிது
(6)

ஒன்றுக்குள் ஒன்றாய் உறவாடி பின்னாலே
ஒன்றோடும் வாழாதார் உண்டு
(7)

காதல் உணர்வின்றி காமத்தில் செல்வோர்க்குக்
காதல் பிரிவெல்லாம் பொய்
(8.)

வேறு வழியின்றி வேறிடம் சென்றபின்
மாறிடுமோ நல்லோரின் மாண்பு
(9)

பிரிந்தவர் சேர்கையில் பெற்றிடும் இன்பம்
எரிந்தவர் நெஞ்சிற்(கு) இதம்
(10)

✍️செ. இராசா

No comments: