26/04/2021

மறைக்க முயன்றேன் முடியவில்லை

 


இரவினைக் கவ்விடும் பகலாய்ப்
பகலினைத் தீண்டிடும் இரவாய்ப்
பட்டெனக் கட்டிலில் வரவா- உனைச்
சட்டென சடுதியில் தொடவா!

சூரியன் சுட்டதும் மேலெழும் நீரலை
....மேகமாய் மாறுதல்போலே-நான்
....மோகமாய் மாறுகிறேனே‌‌
காற்றலை பட்டதும் கொட்டிடும் தூரலை
...பற்றிடப் பாய்வதுபோலே- நான்
...பற்றிட ஏங்குகிறேனே..

சொல்லவும் முடியல தள்ளவும் முடியல
மறுக்கவும் முடியல மறைக்கவும் முடியல
என்னது புரியல எண்ணிட முடியல
கன்னியின் வேதனை காட்டிட முடியல

✍️செ.இராசா

#வள்ளுவர்_திங்கள்_157
#தலைப்பு_மறைக்க_முயன்றேன்_முடியவில்லை

No comments: