05/04/2021

தெளிவோடு நில்-------------வள்ளுவர் திங்கள் 154

 #தெளிவோடு_நில்
#வள்ளுவர்_திங்கள்_154

கருத்துக் கணிப்பெல்லாம் கண்டுக்க வேண்டாம்
ஒருமனதாய்ப் போடுங்கள் ஓட்டு
(1)

மக்களாட்சித் தத்துவத்தை மன்னராட்சி போலாக்கும்
அக்கட்சி யாரென ஆய்
(2)

வெல்கின்ற கட்சியென வீராப்பு பேசாமல்
நல்லோர்க்கு வாக்களித்தல் நன்று
(3)

உள்ளோரில் நல்லோரை உள்ளத்தால் ஆராய்ந்து
கொள்ளையைக் கொஞ்சம் குறை
(4)

பணத்தை விதைத்து பணத்தை அறுக்க
சனத்தை வளைக்கிறார் பார்
(5)

தூண்டில் இரையாலே துன்பம்தான் தீர்ந்திடுமா
வேண்டாம் இலவச(ம்) ஊறு
(6)

கொள்ளையர்கள் கூட்டத்தில் கொள்கையாம் கோட்பாடாம்
வெள்ள(ல்ல)ம்போல் பேசுகிறார் சீ
(7)

இலவசம் தந்திட எங்கய்யா காசு?!
நிலைமையைக் கொஞ்சம் நினை
(8)

நிதியைப் பெருக்க மதுவைப் பெருக்கும்
சதியை விரலால் தடு
(9)

தெளிவோடு நிற்கின்றார் தீர்த்திட வேண்டித்
தெளிவோடு தாருங்கள் தீர்ப்பு
(10)

(வாய்ப்பில்லை இராசா😊😊😊😃😃😃😃என்று சொல்வது புரிகிறது. இருந்தாலும் சொல்லி வைப்போம்)

✍️செ. இராசா

No comments: