25/04/2021

சாயிபாபா



(அண்ணா அவர்களின் விருப்பத்திற்கிணங்க சாயிபாபாவின் நல்லாசியுடன் உருவாகி வரும் பாடலின் சில வரிகள்)

ஷீரடி ஊரின் சாய்பாபா
யாவரும் உந்தன் சேய்பாபா
அறிவோம் ஹரிஓம் சாய்பாபா
ஆண்டவர் நீயெம் தாய்பாபா!?!

அல்லாஹ் மாலிக் என்றே சொன்னார்
அற்புத சத்குரு சாயி
எல்லா மார்க்கமும் ஒன்றே கண்டார்
எங்கள் சத்குரு சாயி
வந்தோர்க் கெல்லாம் அன்னம் தந்தார்
வள்ளல் சத்குரு சாயி
தந்தோர்க் கெல்லாம் தானம் தந்தார்
தந்தை சத்குரு சாயி

வடக்கெனச் சொல்லி வழக்குரைப் போர்க்கும்
கிழக்கென எள்ளிக் கிளப்பிடு
வோர்க்கும்
வடக்கென தெற்கென வகுத்தவர் யாரென
படக்கென பட்டென படைத்தவர் வாக்கென
எண்திசை நோக்கி தன்திசை காட்டிடும்
நன்திசை காட்டியே சாயி
நன்திசை காட்டியே சாயி
நன்திசை காட்டியே சாயி

கடமையை மறந்து உலவிடு வோர்க்கும்
கடவுளை மறந்து களங்கிடும் பேர்க்கும்
நோயென நொடியென நொந்திடும் வாழ்வென
சீயெனப் பொயினும் சீர்பெற வேண்டிட
குருவென உறவென குணமுள்ள நட்பென
வருகிற உருவே சாயி!
வருகிற உருவே சாயி!
வருகிற உருவே சாயி!

✍️செ.இராசா


No comments: