11/04/2021

கடல் அன்னைக்காக ------------ வானத்துக்கு நீலம் தந்து ---- எஞ்சாமி

 #கடல்_அன்னைக்காக
#எஞ்சாமி

 

வானத்துக்கு நீலம் தந்து
மேகத்துக்கு நீரைத் தந்து
பூமிக்கே வாழ்வுதந்த எஞ்சாமி-நீ
சாமிக்கே சாட்சியான எஞ்சாமி!

எவ்வளவு கொடுத்தாலும்
எதைக்கொட்டிக் கெடுத்தாலும்
அப்பவும் அள்ளித்தரும் எஞ்சாமி- நீ
எப்பவும் வாழுஞ்சாமி எஞ்சாமி!

ஏலேலோ ஏல ஏலோ ஏலே ஏலே எஞ்சாமி
ஏலேலோ ஏல ஏலோ ஏலே ஏலே எஞ்சாமி

ஆண்டுகோடி ஆனபின்னும் ஆழிநீரும் வத்தவில்லை
ஆறாறா சேர்ந்தாலும் ஆழநீளம்
கூடவில்லை
நீரெல்லை மாறினாலும் நீரளவு மாறவில்லை.
ஊரெல்லைத் தாண்டினாலும் ஊறுமூலம்
நீயுமில்லை...

ஏலெலோ ஏல ஏலோ ஏலே ஏலே எஞ்சாமி
ஏலெலோ ஏல ஏலோ ஏலே ஏலே எஞ்சாமி

உள்ளுக்குள்ள உப்பூ வச்சு
.....உப்ப எல்லாம் தள்ளி வச்சு
உச்சிமேல ஆவியாகி நீராகி
....ஊத்துகிற மேகந்தானே எஞ்சாமி
....தன்னைப்போல ஈரங்கொண்ட எஞ்சாமி

எத்தனையோ உசுர வச்சு
......அம்புட்டயும் உலவ வச்சு
அதையும் நம்பி புழைக்க வச்சு
.....அங்க இங்க நகர வச்ச எஞ்சாமி
.....அன்னைப்போல ஆனநீயே எஞ்சாமி

✍️செ.இராசா

No comments: