07/11/2020

நோவும் மனிதமனம் பார்!

கூவும் குயிலென்றும் கூவியபின் ஏங்கிடுமோ?
தூவும் மழையென்றும் தூவியபின் வேண்டிடுமோ?
யாவும் இயற்கையிலே இப்படியே இங்கிருக்க
நோவும் மனிதமனம் பார்!

✍️செ.இராசா

No comments: