02/11/2020

தமிழ் மாலும் நகி

 

இடியாய் முழங்கிய
இதயத் துடிப்போடு
எரிமலையாய்க் கொதித்த
இரத்த ஓட்டத்தோடு
சூறாவளியாய் அடித்த
சுவாசக் காற்றோடு
உயிரின் உணர்வுகளை
வரிகளின் வடிவங்களாக்கி
ஏதோ ஒன்று தடுத்ததால்
கொடுக்காமலே வைத்திருந்த
கவிதைகளை எல்லாம்
காண்பித்த அந்தத் தருணம்
அவள் புன்னகைத்தாள்!
........
........
"தமிழ் மாலும் நகி" என்றவாறே...
✍️செ.இராசா

No comments: