23/11/2020

பிறரைப் போற்று


அத்தினாபுரமே
அறுத்து விட்ட போதும்
இந்திரபிரஸ்தம் கட்டி
எழுந்து நின்ற பாண்டவரை
போற்றிட எண்ணாமல்
தூற்றிய கௌரவரின்
அழுக்காற்றுத் தீயாலே
அழிந்தது சுற்றமன்றோ?!!

கியூபாவோ..
கிழக்காசியாவோ..
எங்கெல்லாம் முடியுமோ
அங்கெல்லாம் சென்று
வளர்ச்சி பிடிக்காமல்
வம்பிழுக்கும் ஆந்தையரின்
பொறாமைத் தீயாலே
பொசுங்குவது புவனமன்றோ?!

ஆம்...
தனிமனிதனோ தேசமோ..
பொறுமை வாழ்த்தும்
பொறாமை வீழ்த்தும்
போற்று...
போற்றப்படுவாய்...
வாழ்த்து
வாழ்த்தப்படுவாய்...

வாழ்க வளமுடன்!

#பிறரைப்_போற்று
#வள்ளுவர்_திங்கள்_137

No comments: