19/11/2020

ஈற்றுச்சீர் சொல்: ஊடல்

  


 #குறளுரையாடல்
#கற்பனை_உரையாடல்
#ஈற்றுச்சீர்_சொல்
#ஊடல்

#பெண்
உன்னருகில் நானிருக்க ஓயாமல் 'வா'என்றாய்
நின்கனவில் வந்ததுயார் சொல்?
(1)

#ஆண்;
என்னநீ உன்போக்கில் ஏதேதோ சொல்கின்றாய்
என்னென்ன சொன்னேனோ சொல்?
(2)

#பெண்;
சும்மா நடிக்காமல் சொல்லுங்கள் யாரென்று
ரம்பாவா ரம்யாவா சொல்?!
(3)

#ஆண்;
அடச்சே இதுயென்ன அக்கால பேர்கள்
நடப்புப் பெயர்களாய்ச் சொல்!
(4)

#பெண்;
மனசுல நீரென்ன மாதவனா சூர்யாவா?!
கனவுல வந்ததுயார் சொல்?!
(5)

#ஆண்;
அடயேம்பா நீவேற அத்தானப் போயி..
சுடலாமா இப்படிச் சொல்
(6)

#பெண்;
சும்மா மழுப்பியே சொல்லுவதைச் சொல்லாமல்
வம்பை இழுப்பதுயார் சொல்?!
(7)

#ஆண்:
ஐயோ முடியலையே ஆண்டவா என்னிறைவா
ஐயாநீ எங்கிருக்காய்ச் சொல்?!
(8)

#சிவன்;🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
சின்ன விடயத்திற்கே சீப்பட வேண்டுமா?!
வந்தது நானெனச் சொல்!
(9)

#பார்வதி;😜😜😜😜😜😀😜😜😜😜
யாமிங்கே வீற்றிருக்க யாரிடம் சென்றீர்கள்
சாமியே சீக்கிரம் சொல்?!
(10)

ஆண்:.....?!!!
(ஐயோ சாமி ஆளை விடுங்கள்😀😀😀😀😀)

✍️செ.இராசா

No comments: