26/10/2020

வறுமை கொடியது

 கடையடைக்கும் தருணம்
கால்கடுக்க நின்று
உடைஞ்ச தக்காளிக்கே
ஊர்நியாயம் பேசி
ஏதோவோர் குழம்பு வச்சு
எப்போதோ சாப்பிடும்
ஏழைகளின் வாழ்க்கையில்
என்றைக்குமே இல்லை
நாளை பற்றிய கவலை....
ஆம்..
இன்னும் இன்றே முடியவில்லையே..?!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

பிந்நாளில் வேண்டுமென்ற பேராசை இல்லாமல்
இந்நாளை எண்ணுவோரே இங்கு
#குறள்_வெண்பா

💐💐💐💐💐💐💐💐💐💐💐

ஒவ்வொரு வருடமும்
வேகமாய் ஏறுகிறது
வறியோர் எண்ணிக்கை
#வருத்தப்பா

✍️செ.இராசா

#தலைப்பு_வறுமை_கொடியது
#வள்ளுவர்_திங்கள்_134

No comments: