06/10/2020

உலக நியதி, வள்ளுவர் திங்கள்-131

 

பிரம்மனின் தூரிகையில்



பிறக்கின்ற ஓவியங்கள்...
தொட்டிடும் வர்ணத்தில்
தோன்றிடும் உருவங்கள்...

நிறங்களின் மாயையில்
நிகழ்கின்ற பேதங்கள்..
உயர்தரம் யாதென்று
உரைக்கின்ற வாதங்கள்..

சர்ச்சையின்‌ உச்சத்தில்
சரிகின்ற மரணங்கள்
மடிகின்ற போதினில்
வருகின்ற ஞானங்கள்‌..

எல்லாம் #உலக_நியதி

✍️செ.இராசா

#வள்ளுவர்_திங்கள்_131

No comments: