16/10/2020

தேடித் தேடித் திரிந்தேனடி

தேடித் தேடித் திரிந்தேனடி
என்னைப் பிரிந்தே அலைந்தேனடி
கண்ணே எந்தன் உயிர் மீட்டடி
கவியே... நீயே..நான்தானடி

சும்மா இருந்தேனே வந்தாயடி
பேரன்பே....அதுயோகமே..
யாரோ யாரோ- அன்பே
யாரோ வேறோ?!
யாரோ யாரோ- இன்றோ
யாரோ வேறோ?!

பாலைவன தேசத்தில்
சுட்டும் உஷ்ணக் கொடுமையில்
குளிர்தரும் தருவெனவே வந்துவிடு
கொட்டும்குளிர் தேசத்தில்
வெட்டும் அந்தத் தணுப்பினில்
கனல்தரும் தணலவே வந்து விடு
காதலென்றால் ஊடல் உண்டு
ஊடலென்றால் கூடல் உண்டு
ஏனோ இல்லை இன்று
நானே இல்லை இன்று....

யாரோ யாரோ- அன்பே
யாரோ வேறோ?!
யாரோ யாரோ- இன்றோ
யாரோ வேறோ?!

என்ன வலி அடி
என்ன வழி இனி
நீயே சொல்லடி
கொல்லும் வலி அடி
குத்திக் கிழிக்குது
கோபம் என்னடி?

உன்னால் உருகிடும் இவனை
நீயே மீட்டிட வரணும்
பெண்ணே விலக்கிடு தனிமை
நிஜமே நிழல் தர முடியும்

நீரோடு நீர் மோதி சேதாரமா
நீயோடி நீமோதி சேர் தாரமா       

✍️செ.இராசா

No comments: