14/10/2020

இனிய மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா

 


 

தரைமீதில் வந்திறங்கி
அரை நூற்றைத் தொட்டாலும்
நரைக் கிரீடம் ஏற்காத
கருப்பழகு நாயகரே.....

இறைபற்றி மேலேறி
நிறைவாழ்க்கை வாழ்வதினால்- இனி
குறையெல்லாம் குறைசொல்லி
பறைசாற்றும் பாருமண்ணா..‌

உற்றாரோ மற்றாரோ
ஊராரோ வேறாரோ
யார் யாரோ எல்லோர்க்கும்
நீர் நீராய்த் தந்தீரே...
நீர் தந்த செங்குருதி
வேரூன்றி வாழ்த்துமண்ணா
வேறென்ன வேண்டுமண்ணா?!!

உடல் மெலிந்து தலை கனத்தோர் மத்தியிலே
உடல் கனத்து
தலை கனக்கா ஆசிரியரே- நீர்
கலை மறக்கா ஆச்சிரியரே...!!!

கணத்திற்கு கணம் வாழும்- உனை
கனத்திற்கு கனம் வாழ்த்த- என்
கவிதையிலே முயன்றாலும்
கனமில்லை என் செய்வேன்?
மா கணம் பொருந்திய நீர்
மனமார மன்னிப்பீர்!!
மா குணம் பொருந்திய நீர்
மனம்போல நின்றுடுவீர்!

வாழ்க வளமுடன் அண்ணா!!!

இனிய மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா

✍️செ.இராசா

No comments: