12/10/2020

கனவே கலையாதே, வள்ளுவர் திங்கள்-132

 



உரைக்க முடியா பரம்பொருள்போல்
விள(ல)க்க முடியா மறைபொருளே..
இரவில் ஒளிரும் விண்மீன்போல்
என்னுள் ஒளிரும் கண்நிலவே..

நம்மைப் பற்றி அலர்தூற்றி
நம்முள் தீயை ஏற்றிவிட்டார்..
பற்றிய நெருப்பை அணைத்திடவே
பற்றினாய் நீயும் தனிமையிலே

உன்-மெய் கண்ட உண்மையிலே
என்னை நானே மறந்துவிட்டேன்..
முத்தம் தந்திட எண்ணுகையில்
பொத்தென விழுந்தேன் என் செய்ய?!!

#கனவே_கலையாதே

#வள்ளுவர்_திங்கள்_132

✍️செ. இராசா

No comments: