17/10/2020

கலைமகள் வணக்கம்

 


 #நவராத்திரி_சிறப்பாய்
#கலைமகள்_வணக்கம்

#வெண்ணிற_ஆடை உடுத்தி- நீ
மீட்டுகின்ற வீணை
மீட்டுகின்ற வீணை
சரிகமபதநிச‌......சநிதபமகரிச
சரிகமபதநிச‌......சநிதபமகரிச
சங்கீதம் எங்கிலும் கேட்கும்!!
மனம் உள்ளவர் நெஞ்சினை ஈர்க்கும்
சங்கீதம் எங்கிலும் கேட்கும்!!!!
மனம் உள்ளவர் நெஞ்சினை ஈர்க்கும்

சுழலும் கோள்கள் சுற்றும் பொழுதில்
எழுப்புகின்ற ஓசை! எழுப்புகின்ற ஓசை!
மழலை கூடி மொழியும் பொழுதில்
எழும்புகின்ற ஓசை! எழும்புகின்ற ஓசை!
மழைகள் மோதி முத்தம் வைக்க
ஜலதரங்க ஓடை! ஜலதரங்க ஓடை!
கலைகள் ஆக்கி கானம் ஆக்க
கவியரங்க மேடை! கவியரங்க மேடை!!
மேடை மீதில் வீற்றிருக்கும் சகலகலாவல்லி!
சகலகலாவல்லி!
மீண்டும் மீண்டும் பாடிடுவோம் உமதுபேரைச்சொல்லி! உமதுபேரைச்சொல்லி!!

சரிகமபதநிச‌......சநிதபமகரிச
சரிகமபதநிச‌......சநிதபமகரிச

✍️செ.இராசா

#சரஸ்வதி_வணக்கம்

No comments: