19/10/2020

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர்--பஃறொடை_வெண்பாவில்

 #குறள்

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

#என்னுரை
#பஃறொடை_வெண்பாவில்

#நஞ்சென்று_கண்டபின்_நாக்கிலே_வைப்பரோ?!
கொஞ்சமும் மெய்யில்லைக் கூற்றிதில் என்போரே..
நஞ்சென்று வள்ளுவர் நெஞ்சாரச் சொன்னது
வஞ்சக நெஞ்சுடன் வைக்கின்ற நஞ்சல்ல

நஞ்சுபோல் எண்ணியே நா(ம்)வொதுக்கும் ஒன்றினை
நஞ்செனக் காட்டாமல் நாகரிகம் வேண்டி
பரிமாறும் நல்லுறவின் பாசத்தைக் கண்டுக்
கருணையுடன் ஏற்றல் கனிவென்று கூறும்
திருக்குறள் போலிங்கேத் தேடிப்பார்த் தாலும்
ஒருநூலும் இங்கில்லை காண்!

✍️செ.இராசா

#வள்ளுவர்_திங்கள்_133

No comments: