30/05/2018

இளைஞனே வா...விவேகானந்தரைப்படி


இருண்ட இதயம் பிரகாசமாகி
சோர்ந்த இதயம் சுறுசுறுப்பாகும்!

தன்னம்பிக்கை தானாய்ப் பிறந்து
இறைநம்பிக்கை தேனாய்ப் பாயும்

தரித்திரம் தொலைந்துபோயி
சரித்திரம் உனதாய் மாறும்!

நாடி நரம்புகள் முறுக்கேறி
கோடி வரம்புகள் வசமாகும்!

உண்மை உணர்வுகள் உரமாகி
நன்மை நலனே உரித்தாகும்!

ஞானம் உன்னுள் உருவாகி
ஞாலம் முழுதும் உனதாகும்!

இளைஞனே வா..விவேகானந்தரைப்படி

No comments: