04/05/2018

ஊழ்வினை



என்றோ விதைத்த விதைகளெல்லாம்
இன்றைய விருட்சமாய் ஆனதைப்போல்
என்றோ விதைத்த வினைகளெல்லாம்
இன்றைய வாழ்க்கையாய் ஆனதன்றோ!

எத்தனை எத்தனைப் பதிவுகளோ
அத்தனை அத்தனை வினையாகி
ஒவ்வொரு வினைக்கும் சமமான
மற்றொரு விளைவினைத் தருமன்றோ?!

கிடைத்த பிறவிகள் எல்லாமே
உறைந்த வினையின் பயனாகும்!
ஊறுகள் வருவது எல்லாமே
ஊழ்வினைப் பதிவின் விளைவாகும்!

✍️செ. இராசா

No comments: